அபாய எச்சரிக்கை

இருக்க இடம் இல்லை;
படுக்கப் பாய் இல்லை.
இருப்பதை உலர்த்த வெயில்லை.
ஒரு குடம் நிரப்பவே பாதி நாள் எடுக்கும் பகுதியில்,
ஒரு மணி நேரத்தில் கழுத்துவரை நிரம்பிவிட்டது.
சென்னைக்கு மிக அருகாமையில் என்று சொன்னவர்கள்,
இன்னும் யாரும் கண்ணில் படவில்லை.
உலகத்தின் மூத்த குடியான நீர்.
சில ஆண்டுகள் உதிர்ந்து மறைந்த பின் மிண்டும்,
அதன் குடில் திரும்பியது,
வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டது.

எழுதியவர் : விக்னேஷ் (16-Dec-15, 6:05 pm)
Tanglish : abaaya yacharikkai
பார்வை : 105

மேலே