என்னோடு நீ இருப்பதால்

ஒற்றை உயிர் துடிப்பாய்
எனக்குள் துடிப்பவளே...

ஒரு ஆயுளே போதுமடி
உன்னோடு நான் வாழ்வேனெனில்...

ஈரடியில் துடிக்கும் என் இதயம் கூட
ஓரடியில் துடிக்குதடி - உன்
பெயரை சொல்லிச் சொல்லி ...

ஒருநாளும் உன்னை மறந்து
கடந்தது இல்லை என் நாட்கள் என்றும்...

எல்லோருக்கும் கை அளவு இதயம் எனில்
எனக்கு மட்டும் உன் அளவடி
உன்னை சுமப்பதினால்...

எழுதியவர் : தினேஷ்குமார் ஈரோடு (16-Dec-15, 11:39 pm)
பார்வை : 739

மேலே