செத்தாரை போல திரி...
பிரியா-
எதன் நிமித்தம்,
என்னை புறக்கணித்தாள்,
காரணம் தெரியாவிடினும்...
வலி இன்னும் எஞ்சி நிற்கிறது...
ஒரு சமயம் உலகின்-
ஒரே பெண்ணாக அவளிருந்தாள்.
தற்சமயம் அவளை போன்ற,
பெண்களே உலகெங்கும்...
ஆனால்,
பிரியாவிடம் பிரியா இல்லை.
நிராகரித்ததன் மூலம்-
என்னைக் கொன்றவள்,
தன்னை கொலையாளியாக-
உணராவிடினும்,
என்னை நான் பிணமாக உணருகிறேன்.
மூன்றாம் நாள் உயிர்தெழவும் சம்மதமில்லை....