செத்தாரை போல திரி...

பிரியா-
எதன் நிமித்தம்,
என்னை புறக்கணித்தாள்,
காரணம் தெரியாவிடினும்...
வலி இன்னும் எஞ்சி நிற்கிறது...

ஒரு சமயம் உலகின்-
ஒரே பெண்ணாக அவளிருந்தாள்.
தற்சமயம் அவளை போன்ற,
பெண்களே உலகெங்கும்...

ஆனால்,
பிரியாவிடம் பிரியா இல்லை.

நிராகரித்ததன் மூலம்-
என்னைக் கொன்றவள்,
தன்னை கொலையாளியாக-
உணராவிடினும்,
என்னை நான் பிணமாக உணருகிறேன்.

மூன்றாம் நாள் உயிர்தெழவும் சம்மதமில்லை....

எழுதியவர் : ரமண பாரதி (10-Jun-11, 8:42 pm)
சேர்த்தது : ரமண பாரதி
பார்வை : 336

மேலே