உன்னால் தினம் தினம் என் மரணம்..................



விழியில்
பொங்கும்
கண்ணீருடன்
என் பேனா முனை
திறந்து கிறுக்குகிறேன்
என் இதய காகிதத்தில்
சில நினைவுகளை

முற்று பெறாத
சில காதல்
நினைவுகளுடன்
முனு முனுத்த
உதடுகளுடன்
விரல்களின்
நடுக்கத்துடன்
உன் பெயர்களை

நான்கு பக்க
சுவருக்குள்
நத்தை போல
ஒட்டிக்கொண்டு
நித்தமும்
தியானிக்கிறேன்
உன் நினைவுகளை
மட்டும்

ஒளி குறைந்த
குண்டு பல்பிலும்
உன் நினைவுகளின்
வெளிச்சத்தோடு
பதை பதைப்புடன்
எழுதுகிறேன்
உன்னால் ஏற்ப்பட்ட
காயங்களை

முதல் பக்கமும் இல்ல
கடைசி பக்கமும் இல்ல
நடு பக்கமாகவே
மடிகிறேன்
உன்னால் தூக்கி
எறிய பட்டவனாக

விடியல்கள்
இல்லாத பொழுதுகளும்
உன் நினைவுகள்
வராத நிமிடங்களும்
என் வாழ்வில்
இன்று வரை இல்லை

அதாலால் உன்
நினைவுகள் எனும்
நதியில் விழுந்து
தினம் தினம்
மடிகிறேன்..........

இப்படிக்கு.................உன்னவன்

எழுதியவர் : நந்தி (10-Jun-11, 8:55 pm)
பார்வை : 552

மேலே