எப்படியோ
பெண்ணே!!
அழகிலே நீயோர் உணர்வுச் சித்திரம்!
அன்பிலே நீயோர் உணவுச் சத்திரம்!
சினத்திலே நிலவும் சில்லாய்ச் சிதறும்!
சிரிப்பிலே பரிதியும் பனிக் கூழாகும்!
நுதல் நகர்விலே விண்மீனும் சிமிழ்க்கிறது !
சுட்டு விரலில் சுழற்றுகிறாய் ஞாலத்தை!
பார்வையோ புவியின் ஈர்ப்பு விசை!
நா ஒலியோ செவியை ஈர்க்குமிசை!
இத்துனை,
சிறப்பும் கொண்ட மங்கையே உந்தன்
சிந்தை எந்தன் உளத்தில் சிக்குண்டதெப்படியோ?