நிலவாய் போனவள்

நீ விட்டுசென்ற ஒருத்தி
நிலவாகினாள்...!!!

உன்னை மட்டும் நினைத்து
துடிப்பதால் இதயத்தை
கழட்டி எறிந்து விட்டாள்..!!
உன்னை நினைத்த பாவத்திற்கு
இதயம் எங்கு கிடந்து துடிக்கிறதோ?

அவள் இப்பொழுதெல்லாம் இதயம் அற்றவள்..!! !
சத்தமாய் சிரிக்கின்றாள் அது அவள் அழுகையின் மொழிபெயர்ப்பு..! !

உன்னைப்பற்றி கனவு வரும் போதும், யாராவது உன்னை பற்றி
உளரும் போதும்
அவள் முழுநிலவுதான்.!!!

அடுத்த கணம் அவள் பிறையாகி
போவதை தடுக்க முடியாது
உன்னால் கூட..! !!
வார்த்தைகளை கடித்து துப்புகிறாள்
அது கவிதையாம்..!!

அடிக்கடி உளருகிறாள் அவள்
நிலாவாம்..!!! எட்டிவிட முடியாத
தூரத்தில் அவள்..??
ம் ம்.. சாத்தியம்தான்..

நில்...!! !!!!!
எங்கே ஓடப்பார்க்கிறாய்..?
நான் பிசாசு அல்ல..
அந்த
நிலவாகி போனவளின்
மனசாட்சி. .!!!!
அவள் உன்னை உதறிய வேகத்தில்
நானும் விழுந்து விட்டேன்..!!

என்னையும் தவறவிட்டு
தொட்டுவிட முடியாத தூரத்தில்
அவள்..!!!!! !

இயன்றால் என்னையாவது அவளிடம் சேர்த்துவிடு..!!
அந்த நிலவாய் போனவள்
பெண்ணாய் மாறட்டும்
..
இவள் நிலா..

எழுதியவர் : இவள் நிலா (22-Dec-15, 10:20 am)
பார்வை : 84

மேலே