திருமகளைக் கொன்றார்
வறுமையில் வாடிய தம்பதிகள் இருவர்
திருமகளை மனமுருகி தினம் பூசை செய்தார்.
தனை வேண்டி துதித்தவர்க்கு அருள்செய்ய அவளும்
மனைவியின் கர்ப்பத்தில் மகளாக நுழைந்தாள்.
அவரோ
வரப்போகும் மகவு ஓர் பெண் என்று கண்டு
கருவைக் கலைத்தார்; திருமகளைக் கொன்றார்.