என்ன வீதியோ என்ன மலரோ
கற்பூர முல்லை வீதியிலே
கருவாட்டுக் கூடை மணம் வீசும்
மலரில் தொடுத்த சரம்
பூக்காரி கூடையிலே மனம வாடும்
பிணம் தூக்க நாலு பேர் போதும்
மௌனத்தில் ஒரு நானூறு பின்னே போகும்
ஆதரவற்ற அனாதைக் குழந்தைகளின்
அழுகுரல்கள் வீதி ஓரங்கைளில் கேட்கும்
பொதிகை வீதியிலே பொதி சுமந்து கவிக் கூட்டம்
மனக் கூடையில் காகித மலர்க் குவியல்
வாச மலர்களுக்கு வாடிக்கையாளர் இல்லை
வசந்த மலர்கள் வாடிக் கிடக்குது தெருவோரம்
முற்றிய முள்ளிடையே முல்லையை படரவிடுவார்
புற்பரப்பினை பூஞ் செடியென்று போற்றுவார்
கற்குவியலை கோபுரம் என்று காட்டுவார்
நெற்பயிர் நிலத்தில் கனவில்லம் நாட்டுவார்
அந்தி மந்தாரை சாமந்திகளே அழகிய தாமரைகளே
அர்த்த ராத்திரி புஷ்பங்களே செண்பகமே மல்லிகையே ராணி மலர் ரோசாவே கேளுங்களடி
கற்பூர முல்லை வீதியிலே
காகிதப் பூக்களின் ஆரவாரம்
~~~கல்பனா பாரதி~~