வலி என்பது யாதெனில்

* நழுவிப் போனது
அரசுப் பணி ;
வலிக்கவில்லை ...!

* பிரிந்து சென்றாள்
விரும்பியவள் ;
வலிக்கவில்லை...!

* முதுகில் குத்தியது
நட்பு ;
வலிக்கவில்லை...!

* "யாரிவன் " என்றனர்
உறவினர் ;
வலிக்கவில்லை...!

* "அடைந்தேன் சிகரம் "
உடைந்தது ;
வலிக்கவில்லை...!

* எல்லாம்...
என் தாய்
என்னைவிட்டு
போன பின்...!

* இன்னும்
இலக்கை நோக்கி
வலுவுடன்
ஏறுகிறேன்...

வலியின்றி...! ?

*

எழுதியவர் : சுரேஷ் முத்தையா (28-Dec-15, 6:17 pm)
சேர்த்தது : சுரேஷ்வால்மீகி
பார்வை : 68

மேலே