உன்னோடு தான் நான் வாழ்வேன்

உன் இருவிழி
பார்வையில் பூக்களாய்
தினம் பூப்பேன்
உன் நினைவுகள் என்னுள் இருந்தால்
மரணத்தை தாண்டியும்
உயிர் வாழ்வேன்

எத்தனை
முறை நீ கேட்டாலும்
என் காதல் மாறாது
அது உன்னை
விட்டு போகாது

உனக்காகவே கடவுள்
என்னை பூமியில்
படைத்ததாய் கருதுகிறேன்
என்னை ஏற்பாயா
என நீ கேட்பதில்
என்ன நியாயமடி. . . ?

நீ இல்லாமல்
நான் வாழ்வது எப்படி
நீயே கற்றுக்கொடு
இல்லையென்றால்
நீயே எனை கொன்றுவிடு,

நதி நீர் நான் ,
கடல் நீர் நீ ,
எங்கிருந்தாலும் உன்னை
தேடி வருவேன் ,
ஒரு அலையாய் உன்னோடு
சேர்வேன்,
உன்னோடு தான் நான்
வாழ்வேன்.



காதலோடு
" ஏனோக் நெஹும் "

எழுதியவர் : ஏனோக் நெஹும் (30-Dec-15, 8:29 am)
பார்வை : 227

மேலே