அன்னை மீனாட்சி தாயே
பொற்பதம் பணிந்து
நற்குணங்கள் பெற்றிட
அற்புதங்கள் தந்திடும்
சொற்பதம் அளித்திடும்
நற்சுவைதரும் நாயகியே
கடந்திடும் காலமும்
வந்திடும் சோகமும்
தாவிடும் மனமும்
மாற்றிடும் மாதே
வருத்தங்கள் மாறிட
விருப்பங்கள் நிலைத்திட
பொருத்தங்கள் அமைந்திட
கருத்தில் நின்றிடும் கற்பகமே
நாளும் உந்தன் நினைவு
நித்தம் உன் பெருமை
நான் பேசிடல் வேண்டும்
நீ எந்தன் வாழ்வில்
ஒளி கூட்ட வேண்டும்.
இன்பமும் துன்பமும்
மாறி வருதல் இயல்பன்றோ
இருப்பதைக் கொடுப்பதும்
மனதின் நிலையன்றோ
வாழ்க்கையின் வளம் யாவும்
மாறத நிலையாக வேண்டும்.