குறுந்தொகை தமிழர்
எட்டுத்தொகை பொன் வளர்த் தாயே
நல் நற்றிணை அவற்றினோர் சேயே
பெற்றறெடுத்த பாடல் நா னூற்றொன்றே
கடவுள் வாழ்த்து தனைத் தவிர்த்தே
பாடல் முடித்து வகுத்த திணை.
கடவுள் கருணை யால் காணவில்லை
என்னு மொழி நலமாய் இங்கில்லை
கை தங்கியதே முழு நூலும்
கடவுள் வாழ்த்து கண் தவிர்த்து
உறைந்த பாடல் நானூற் றொன்று
அளித்தா சிரியர் இரு நூற்றாறு
தெரியாதா சிரியர் பெயரே பத்து
இருந்து மவர் பாட்டோ சுவை
மூன்றடி சிற்றின்பம் சிந்தை சிலிர்க்க
எட்டடி பேரின்பம் பெருகும் மனம்
அகம ளிக்கும் நானுற் றொன்று
தேன் பிழியும் மனம் நின்று
பாரத பெருந்தேவன் முதல் பாட்டமைத்தார்
முருகவேல் கொண்டே வாழ்த் தமைத்தார்
தொகுத்தத்தார் பூரிக்கோ,தெரியாதே தொகுப்பித்தார்
பெயரால் சிறந்தா ரன்றி இங்கு
பாடல் கொண்டே சிறந்தார் பலரே
இத்தொகை விரிக்கும் அக்கால நிலை
இங்கு காணத் தொடர வாரும்.
அமைந்ததே காதலோர் அமரத் தன்மை
இம்மை நின் நெஞ்சு நேர்ந்தஎன்
கணவனே வேண்டும் இருந்தால் மறுமையும்.
காதல் ஆழம் விரி வுயர்ச்சி
விண் தொடும் இன்ப உணர்ச்சி
கொடுத்துப் போற்றும் சுவை குன்றா
இச்சுவை அளிக்க வேறேதும் உண்டா
உவமையே உள்ளம் பறிக்கு மிங்கு
பால்வெளியாய் பரந்த உவமை முழுதே
அடித்தி ழுக்கும் அடி நெஞ்சை
ஊரார் பேசும் பழிச் சொல்
விளக்கும் ஞானப் பெண்ணி னுவமை
களிறு கால் பட்ட அத்திப்பழமாவள்
பெண்மை தானே வீணாவது குறித்துரைக்க
ஆவின் பால் கன் றுண்ணாமல்
கலம் புகாமல் வீணே மண்
விரைந்து பாழாகும் என் றழகுவமை.
செம்புலம் கலந்த நீர் போலே
தம் நெஞ்சம் கலந்து விட்டனவே..
காதலன் இழந்த பெண் குரங்கோ
மடியவே மலை கீழ் வீழ்ந்ததுவே.
பாட் டனைத்தும் இன் னொலியில்
தலைவன் தலைவி தோழி கண்டோர்
பரத்தையர் இவர் உரைக்கு மாறே.
கேலி கூறி பின்னே தமிழை
தான் கற்று கபிலர் வாய்
தமிழ் பா ட்டொன்று வடித்த
ஆரி யரசன் யாழ் பிரமத்ததன்
என்பாரும் பாட்டு வைத்தார் தொகையிலே
பழந்தமிழ் பண்பாடு பல உள
நீளும் பட்டியல் தமிழர் உணவிலே
பறை சங்கொலித்து மணம் முடிக்க
மணம் முடித்த பெண் கால்
சிலம்பழிக்க, இடுகாடு கண்டே பின்
ஈரடி விலகி தாம் நடக்க.
மணம் முடிக்க பெரியோர் முன்நடக்க
சிறார் ஆடும் பரி வண்டி
‘கடல் சூழ் மண்டிலம்’ இவ்வடி
உரைத்தார் புவி உருள் என்றே
கட லெல்லை மாற்றம் நிலப்
பிளத்தல் பேரலை சொல்லும் பாட்டு
காணு மென் குறுந்தொகை யிலே
நறுந்தேனின் சுவையாய் அகம் நிற்கும்
குறுந்தொகையின் பாட்டு நானூற் றொன்றும்