கருணை கடல்

காண்கின்ற அனைத்திலும்
அன்பையே பிரதிபலிக்கும்
குழந்தைகள்
போலிகள்,
அசல்கள் என
பேதம் கொள்வதில்லை
பிழைகளில் கூட
இழையோடும் பாசம்
மழலைகளின் வாசம்
நிழலோடும் பேசும்
உண்மை நேசம்
மழலையர் வசம்
பேசாத சிற்பத்துக்கு
பேசும் சிற்பம்
உதவி புரியும்
மெய்யான அக்கறை
பொய்யாகாத கருணை கடல்!