குறள் வித்தகம் - 3

கருவிழிப் பார்வையும் காதல்பே சும்,நின்
பருவமென் பாவின் கரு .
கிளிஞ்சல் சிரிப்பும் கிளர்ச்சி யளிக்கும்
களிப்பிலுன் செவ்வாய்க் கிளி .
நடன அசைவில் நளினமும் கூடும்
அடடா!நீ மெள்ள நட .
குறிஞ்சி மலராகக் கொய்தா யிதயம்
அறிவாய்நீ தான்யென் குறி.
படிப்படியாய் முன்னேறிக் காதலில் வீழ்ந்துத்
துடிப்புட னென்னைப் படி .
சகிப்பே னெனைநீவை தாலும் பிரியேன்
மகிழ்வாய் பிரிய சகி .
விரிவாகப் பேச வெளிச்ச மெதற்கு
புரிந்துப் படுக்கை விரி .
திரிபுர சுந்தரியுன் சேவையில் நானே
எரியும் விளக்கில் திரி .
உண்டி சுருங்க உடலு மிளைத்திடும்
பெண்ணே அளவுடன் உண் .
பொறுப்பு மிகுதியால் பொங்கியது கோபம்
வெறுக்காமல் சற்றே பொறு .
குறட்பா வித்தகம் :முதற்சொல் முடிவில்
*************************************************************
[இந்த உத்தியில் முதற்சீரில் வரும் சொல் ஈற்றுச் சீர்களில்
வேறு பொருளில் வரும்.]