தமிழா நீ என்ன நீர்க்குமிழா

தமிழா நீ என்ன நீர்க்குமிழா
தரணியில் நீ காணாத தடையா
தடை உடைத்தெறிய உனக்கு தெரியா வழியா
உலகத்தில் நீ வாங்காத உதையா
உதைத்தவனையும் வாழ வைக்கும்
உன் குணத்தில் என்ன குறையா
எல்லாமே உனக்கு தெரியும் சரியா - ஆனால்
எதையுமே செய்யமாட்டாய் நீ முறையா
தமிழில் பேசி படித்து எழுதி உனக்கு அசதியா
ஆகவேதான் அந்நிய மொழி மோகம் கொண்டாய்
ரொம்ப வசதியாய்..

எழுதியவர் : கோபிநாதன் பச்சையப்பன் (6-Jan-16, 1:30 am)
பார்வை : 409

மேலே