நீ அழுகின்றாய்

இது ஓர் ஆழ்ந்த
உறக்கம்.. தொலை தூரத்தில்.
உன் குரல்.. இமை திறக்கும் முயற்சியில் நான்!!
நீ திரும்பி வா... என்கிறாய்
ஏன் உன் குரல் விசும்புகிறது
அட! நீ கூட
அழுகிறாயா
ஏன்??

இமைகள் கனக்கின்றன..!!
என்ன இன்று
மட்டும் இப்படி உறவுகள் அழைப்பதாய் கூட
உணர்கின்றேனே
ஒரு வேளை.. நான்..!!
இல்லையில்லை

இமைதிறந்து எழுந்தேன்
அருகில் நீ..மற்றும்
என் சுற்றம்..!!
இதயம் லேசாகி பறந்தேன்
சொல்லப் போனால்
காற்றில் மிதந்தேன்..!!

அன்பே..! ! நான் எழுந்து
விட்டேன்
இது என்ன!! ஆண் பிள்ளைகள்
அழலாமா!?? நீ கூட அழுவாயா??
சரி ஏன் அழுகிறாய்? என்
ஆழ்ந்த உறக்கம் தான் கலைந்து
விட்டதே!!
என்னை கொஞ்சம் பாரேன்

திரும்பி பார்த்தேன்
உறைந்து போனேன்..!!
என்னை போல ஒர்
உருவம் அமைதியாய்
உறங்கி கொண்டிருந்தது..!!
நான் இறந்து விட்டேனா??

அந்த ஆழ்ந்த உறக்கம்
களையாததது என்
உடலுக்கு..!!
இனி இந்த களைந்த
உறக்கம்
முடியாததது
என் உயிருக்கு..!!

எழுதியவர் : இவள் நிலா (6-Jan-16, 6:40 pm)
Tanglish : aazhntha urakam
பார்வை : 691

மேலே