அணு
அது நகர்வதாகவும் ..
நகராமலும் இருக்கிறது
அது அருகிலும் ..
தூரத்திலும் இருக்கிறது
அது உள்ளேயும்..
வெளியேயும் இருக்கிறது !
ஈஷோபநிஷத்தின் தத்துவம்
இப்படித்தான் சொல்கிறது
இருப்பதும் ..
இல்லாமல் இருப்பதுவுமானதை ..!
சிலரால் இருப்பதையும்
சிலரால் இல்லாததையும்
உணர முடிகிறது ..
இரண்டுமே உண்மைதான் !
அணுவின் கூறுகளுக்குள்
இருப்பவைக்கு இடையினில்
இல்லாமை என்கிற வெளி கூட
நீயும் நானும் சேர்ந்தே இருப்பது போல !