மனிதனே மகானாகிறான்

மனிதனே மகானாகிறான்!

உள்ளீடற்ற
மூங்கில்களே….
புல்லாங்குழல்கள்
ஆகின்றன!

உள்ளீடற்ற
நீலவானமே
நட்சத்திரங்களையும்
கோள்களயும்
தாங்குகிறது!

உள்ளீடற்ற
நாணல்களே
ஆறுகளின் கரையை
காக்கின்றது!

உள்ளீடற்ற
வெங்காயமே
கண்ணீரையும்
வரவழைக்கின்றது!

உள்ளீடற்ற
மனங்கொண்ட
மனிதனே
மகானாகிறான்!


--- கே. அசோகன்.

எழுதியவர் : கே.அசோகன் (11-Jan-16, 9:12 pm)
பார்வை : 150

மேலே