மரக்கயிறு பழமொழி கவிதைகள் -பாகம் -1

மணலை கயிராக
திரிப்பவர் வாழும் பூமியில்
மரத்தைக் கயிராய் திரித்து
வான்வரை சாதனை செய்யலாம்!

ஒவ்வொரு நாளும்
நம்மைச் சுற்றி
ஒரு விருட்சம் நட்டால்
வாழ்நாள் முடியும் நேரத்தில்
வான்வரை வளரந்திடும் நம்
தாவர நேசம்!

ஆகாயங்கள் வரை நீண்டிடும்
அவற்றின் கிளைகளில் விண்ணுலக
பயணம் மேற்கொள்ளலாம்
முடிந்தால் மரங்களை வளர்ப்போம்
மடிந்தாலும் இயற்கையை காக்க முற்படுவோம்!

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (13-Jan-16, 11:51 am)
பார்வை : 77

மேலே