இன்னும் உயிர் இருக்கிறது

ரேகைக்குள் நீ தொட்ட வடுவும்
நினைவுக்குள் நீ செதுக்கிய உணர்வும்
இளகிய என் இதயத்தை
உலோகமாய்
உருக்கிக் கொண்டிருக்கிறது..
என் உடலில் உயிர்
ஒட்டியிருப்பதை உணராமல்..
காதலில் சொல்லாமை
செங்குருதி கக்கா கொலை தானே..

எழுதியவர் : தீபாகுமரேசன் (18-Jan-16, 12:55 pm)
பார்வை : 755

மேலே