வரலாற்றில் ஓர் ஏடு
ஓட்டை விழுந்த ஓலைக்குடிசையில்
ஓட்டை முழுவதுமாய் காற்று வரும்...
உடம்பில் ஒட்டிய ஈரத்துணி காயாது
மாற்றுத்துணி போட்டுறங்க வேறு துணி போதாது...
பகலில் பாதி பள்ளியில் போக
மிகுதிப்பாதி பட்டறையில் போகும்...
இரவு நேரம் என் குடிசையோ இருள் தர
எதிர் வீட்டு அக்காவின் விளக்கு ஒளி தரும்..
விழித்திருந்து படிக்க, இரவுகள் உறக்கமின்றி நீடிக்க
எனக்கு என்னமோ நுளம்புகள்தான் நண்பனாகின்றன..
விறகுச்சாம்பலில் பல் துலக்கி என் விடியலும் விடிகின்றன
ஒரு கோப்பை கஞ்சியில் என் மாலையும் மடிகின்றன..
"ஒரு நாள் எனது வரலாறையும் இவ்வுலகம் படிக்கும்"