படைப்புகள் அனைத்தும் அவளே

ஒரு அழகான உலகத்தின்
அதிசய சாயல் அவள்
ஒரு கல்லில் பூத்த
மலர் சிலை அவள்
திரும்பி பார்க்க வைத்த
தேவதை முகம் அவள்
ஏங்க வைக்கும் கருணை
உள்ளம் அவள்
இதுவரை யாரும்
பிறந்தது இல்லை அவளை போல
இனியும் பிறக்க வாய்ப்பில்லை
என் அன்னையை போல
அம்மா உன்னால் படைக்க பட்டேன்
கல்வி அறிவை எனக்கு உருவாக்கி தந்தாய்
சொந்த காலில் என்னை நிற்க வைத்தாய்
தைரியத்தையும் நம்பிக்கையையும்
என்னுள் விதைத்தாய்
இன்று உன்னால் மீண்டும் படைக்க பட்டேன்
ஒரு சிறந்த பேராசிரியராய்
உனக்கும் தந்தைக்கும் அடுத்தாற்போல் உள்ள
குரு என்ற இடத்தை
எனக்கு அளித்தாய்.
இன்று நான் படைக்கிறேன்
என்னை போல சிறந்த
போராளிகளை....

எழுதியவர் : கஸ்தூரி (28-Jan-16, 11:25 am)
பார்வை : 211

மேலே