-எட்டிக்காய் மனிதர்கள் பழமொழி கவிதைகள் - 2

எட்டிக்காய் பழுத்தால் இனிப்பாகிடுமோ
குற்றவுணர்வில் கொப்பளித்து துப்பிடும்
வார்த்தைகள்
கொஞ்சலானால் என்ன
குமுறும் மனங்களின் புலம்பல் ஆனாலென்ன
கோபக்கனல்கள் ஆனாலென்ன
அச்சங்களில் வெளிவந்த நக்கல்கள் ஆனாலென்ன
சஞ்சலங்கள் கூட்டுமே தவிர
நிம்மதியை ஈட்டப்போவதில்லை

மதியை விட்டபின்
நிம்மதி கிடைப்பதில்லை
நிம்மதி நின் மதியன்றி
அவமதிப்பு ஈட்டித்தராது
அவமதிப்பும் மதிப்பாகிறது
குணம் கொண்டவர்க்கு
இன்சொற்களும்,நற்செயல்களும்
ஈட்டித்தராத நிம்மதியை
எச்சொற்கள் தந்துவிடும்

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (30-Jan-16, 6:33 pm)
சேர்த்தது : சுமித்ரா விஷ்ணு
பார்வை : 231

மேலே