நத்தை மனிதர்கள் பழமொழி கவிதைகள் - 1

வாயும்,வயிறும்,கால்களும்
ஓர் பாகத்திலே கொண்டதால்
ஊர்ந்து செல்லும் பரப்பையே
உணவாக்கிக் கொள்ளும் நத்தை
மனிதர்களில் கூட
மனசாட்சியற்றவர்கள் இப்படித்தான்

தன்னைக் காத்துக் கொள்ள
நத்தை வெளியிடும் திரவம்போல்
விஷமிகள் வேஷங்கள்

விசித்திரமான படைப்புகளாய்
நத்தை கூடு போர்த்திய
நயவஞ்சகர்கள் நடமாட்டம்
நம்முடனே தொடர்ந்து
நம்மையே அழித்திடும்
வஞ்சகர்கள்
விலையாய் பெறுவதோ
நற்பெயரை

கூட இருந்தே
குழி பறிக்கும் கயவர்கள்
நத்தை மனிதர்கள்

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (30-Jan-16, 6:16 pm)
சேர்த்தது : சுமித்ரா விஷ்ணு
பார்வை : 295

மேலே