காதல் எனும் ஒரு வழிப்பாதை கவிஞர் இரா இரவி

காதல் எனும் ஒரு வழிப்பாதை ! கவிஞர் இரா .இரவி !

அன்றும் இன்றும் என்றும் இனிக்கும் காதல்
ஆதியில் தொடங்கி கணினிக் காலமும் தொடர்வது !

காதலித்தவர்கள் மட்டுமே உணரும் உன்னதம்
காதலிக்காதோர் மண்ணின் சொர்க்கம் காணாதோர் !

காதலர்கள் அழிந்தாலும் காதல் அழிவதில்லை
காதல் முக்காலமும் எக்காலமும் வாழும் !

ஒரே ஒரு முறை காதல் அனுபவம்
உயிருள்ளவரை நினைவில் நிற்கும் !

மூளையின் ஒரு ஓரத்தில் இருக்கும்
முதல் காதல் என்றும் வீற்றிருக்கும் !

காதலில் வென்றவர்கள் மறக்கிறார்கள்
காதலில் தோற்றவர்கள் மறப்பதில்லை !

காதல்தோல்வி வலி உணர்தவர்களுக்கே புரியும்
காதலை அறியாதவர்களுக்கு புரிவதில்லை !

மூன்றாம் நபர் சதியாலும் முறிந்திருக்கலாம்
மூச்சு உள்ளவரை நினைவு அழியாது !

உலகின் எதோ ஒரு மூலையில் இருந்தாலும்
உள்ளத்தில் ஒரு வித ஏக்கம் இருக்கும் !

பார்க்க விரும்பவில்லை உதடுகள் சொல்லும்
பார்க்க வேண்டுமென்று உள்ளம் துடிக்கும்

உண்மைக்காதலை ஒருபோதும் மறக்க முடியாது
உண்மைக்காதல் ஒருவழிப்பாதை திரும்ப முடியாது !
--
.

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (9-Feb-16, 10:20 am)
பார்வை : 278

மேலே