உயிர் வலியே,உயிர் வளியே

என்ன நினைத்து என்னை காதலில் விழவைத்தாய்.
கண்ணீர் வழிந்தோட உனை எண்ணி
அழவைத்தாய்.
உதட்டினால் முத்தமிட்டு உணர்வினை தூண்டினாய்
தீண்டியே எனை அணைத்து
எல்லையை தாண்டினாய்.
உன் விரல் பட்ட இடமெல்லாம்
விரதத்தை விட்டது.
எனக்குள்ளே உனைச்சேர்க்க
உயிர் வழிவிட்டது.
காதல் முற்றிய கனியினை சுவைத்தோம்.
காமத்தின்பிடியிலே இருவரும் திளைத்தோம்.
முழுமதி முதல்முறை மேகத்தில் கலந்தது.
தழுவிடும் உன் கரம் வடுக்களை
பதித்தது.
தொடராதா உன் முத்தம்
தவிப்போடு உயிர் மொத்தம்.
தெளியாதா உன் பித்தம்.
தொடரவேண்டும் இனி நித்தம்.
உனைவிட்டு பிரிந்திருக்க முடியாத நிலையிலே.
எனைவிட்டு ஏன் சென்றாய் எரிகின்றேன் வலியிலே....

எழுதியவர் : கு.தமயந்தி (11-Feb-16, 12:12 pm)
சேர்த்தது : குதமயந்தி
பார்வை : 104

மேலே