கைம்மாறு எதிர்பாராமை

செல்வழி நிலமெங்கும் செழிப் பளித்துப்
பாயும் நீண்ட ஆறும்;
பாரினில் உயிரொளி அணையா திருக்க
உயிர்ப்புத் தரும் வளியும்;
தன்பிள்ளைதனின் மெய் வளர்ச்சியடைய தன்னமுது
நிவேதிக்கும் அன்புத் தாயும்;
உள்ளம்கவர்ந்த அன்பருக் கின்னல் ஒன்றெனில்
விரைந்து வந்துதவும் நட்பும் ;
தாம் செயலாற்றிய தத்தம் கடமைகளுக்கு
கைம்மாறு ஒருபோதும் வேண்டா !

எழுதியவர் : குறள் பொழிலன் (12-Feb-16, 1:47 pm)
பார்வை : 260

மேலே