என்னுள்ளே நீ மட்டும்

கல் எறி பட்ட குளம் போல
கலங்கி கிடக்கிறது மனது
உன்
சொல்லெறியப் பட்டதால்.......

அங்கும் அலை அலையாய் -உன்
கலங்கிய நினைவலைகள் மீதமாய்
ஓரதில் காதிருக்கும் கொக்கு போல நான்

எத்தனை நடு நிசி பொழுதுகள்
நீழும் இந்த இடைவெளிகள்.....

நரகத்துக்குள் நகர்கிறது
வாழ்க்கை
வழக்கத்துக்கு மாறாக என்
தலை வாசலில் மட்டும்
அமில மழை....
உனக்காக மொட்டவிழ்ந்த
ரோஜாவின் கருகிய
வாசனை நாசியில்
மூச்சடைக்க செய்கிறது
முயர்சிக்கிறேன் முடியவில்லை
துடைத்தெறிய பார்கிறேன்
கண்ணாடியில் என்
விம்பத்துக்கு பதில் தெரிகிறது
உன் முகம் மட்டுமே.....
அட
காட்சிப் பிழை என கடந்து போகவும்
முடியவில்லை
ஆனால்
உன் நினைவேட்டில் எப்போதும்
மீதமாக இருக்கும் இடைவெளிகளை
நிரப்ப மட்டும் நான் என்பது புரிந்தும்
என் வாழ்கை புத்தகதில் உனக்கு
அனைத்து பக்கங்களையும்
வழங்கியது என் அறியாமையே......
ம்ம்ம் புரிகிறது
அறியாமையை கடந்ததல்லவா காதல்
இன்றும் புது புனலாய் என் உள்ளே
நீ மட்டும்......

எழுதியவர் : thadcha vrj (15-Feb-16, 3:05 pm)
Tanglish : ennulle nee mattum
பார்வை : 148

மேலே