நேசமே நிரந்தரம்

நகரும் வாழ்வில்,
நெஞ்சின் நினைவில்,
நிதமும் கொள்ளும் சிந்தனை,
நகையும் பணமும் - அதுவே
நிர்ணயிக்கிறது திருமணத்தை.

வரதர்ச்சனை சிந்தியுங்கள்,
வர ஏன் தர்ச்சனை,
வாழ நேசமும் பாசமும் புரிதலும் தானே வேண்டும்,
வளமான வாழக்கை பெற,
வன்மை இல்லா பெண்மையை தானே,
வலை வீசி தேட வேண்டும்.

ஆனால் இன்றோ தேடுகின்றனர்,
அகத்தின் நேசத்தை அல்ல,
அழகின் முகத்தையும்,
அழிக்கும் பணத்தையும்,
அழிந்து போகும் அழகையும்,பணத்தையும் கொண்டு,
ஆயுள் முழுதும் வாழ்ந்திட முடியுமோ ?

தேடுங்கள் செழுமையாய் வாழ்ந்திட,
அழகை அல்ல அன்பை,
பணத்தை அல்ல பண்பை,
பரிமாற்றுங்கள் நேசத்தை,
பெருமை என்று பணத்தை அல்ல,

நேசத்தை தேடி மாலையிடுங்கள்,
நீங்கிடும் நிந்தனை,
நிலைபெறும் வந்தனம் !!!

பெண்களுக்கு ஓர் மன்றாட்டு,
மனந்திடுங்கள் மணவாளனை,
மனதை மட்டுமே நேசத்து மணப்பவன் என்றால்.

ஆண்களுக்கு ஓர் மன்றாட்டு,
அரவணைத்திடுங்கள் செல்வத்தை அல்ல,
அனுதினமும் உங்கள் நேசத்தை மட்டுமே எதிர்ப்பார்க்கும் பெண்மையை,

மனமார பணம் அல்ல மனமாற்றி மனம் முடிக்க வாழ்த்துக்கள் !!!

எழுதியவர் : ச.அருள் (18-Feb-16, 4:52 pm)
Tanglish : nesame nirantharam
பார்வை : 408

மேலே