நான் இறந்த காலம்
( வேலை பார்க்க வெளிநாடு
சென்றிருந்தவன்,
தன் பழைய காதலியை
கற்பத்தோடு பார்க்க
நேருகிறது!கல்யாணம்
நடந்ததே அவனுக்கு
தெரியவில்லை!
அங்குதான் இந்த வார்த்தைகள்
கவிதையாய் மாறின)
இப்படி உன்னை
பார்க்க நேருமென்றால்
நான் வந்திருக்கவே
மாட்டேன்!பெண்ணே!
♦
நம் ஞாபகங்களை
நான் மீண்டும்
சரிசெய்து மூளைக்குள்
சிறைகொண்டது,
உன்னை இப்படி பார்க்கவா?!
♦
என்ன காரணம் என்றே
தெரியாமல் கண்கள்
தன் கண்ணீரை சொட்டுகிறது பெண்ணே!
♦
கடல் தாண்டி வந்தது ,உன்
கற்பத்தை பார்க்கவா?
கடல் தாண்டி வந்தது,நான்
கண் கலங்கி நிற்கவா?
♦
எத்தனை ஆசைகள்
மனதில் அடக்கிருந்தேன்
தெரியுமா??
ஒரே நொடியில் வீசி
எரிவதென்றால் என்னால்
எப்படி முடியும்??
♦
இதை சொல்லிஇருக்கலாமே!
உன் கல்யாணத்திற்கு
இந்த பழைய காதலனை
அழைக்க மறந்து விட்டாயா?
இல்லை
மறுத்துவிட்டாயா?
♦
உன் குழந்தையை பார்க்கதான்
எனக்கு அழைப்புண்டோ!!
ஓ!!! பெண்ணே!
உன் அழைப்பிற்க்கு பதிலாய்
என் மரணத்திற்க்கு தவறாமல்
உன்னை அழைக்கிறேன் !
♦
அதற்குமுன் ஒரு கேள்வி
!
என் மரணத்திற்க்கு பிறகு
நம் காதல் கதைகளை
உன் குழந்தைக்கு சொல்லி வளர்!
அவனோ(அவளோ)
உன்னை போல் இல்லாமல்
என் போல் பிறரை
காயப்படுத்தாமல் இருப்பதற்கு
கற்றுக்கொள்வார்கள்!!
♦
அதிலும் கேட்கிறாயா??
என்போல் காயத்தோடு
இறந்து விட்டால் என்று??
ஓ!!! பெண்ணே
தமிழ் மொழியில் வார்த்தை
இருந்தால் பதிலை தேடிச்சொல்கிறேன்!
♦♦
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
