என்னவளே

ஏழு நிறத்து வானவில்லு
வண்ணம் இழந்து போகுமோ..
காதலெனும் சொல்லுக்குள்ள
எல்லா வண்ணமும் மீளுமோ..

அவள நினைக்கையில
தேன் சொட்டு நாவில் ஊருது..
இடைவிடும் கண் சிமிட்டலாலே
என்கர்வமோ காணாப் போகுது..

தமிழ் பயிலும் காரணத்தால்
காதலிப்பதில் அழகு கூடியதா..
ஒட்டுமொத்த என் உயிர்மெய்யில்
உன் மெய்யும் சேர்ந்ததா...

காதலை சொல்லாமலே
அனுஅணுவாய் ரசிக்கிறேன்..
சொல்ல வரும் நேரம் காதலின்
முடிவை எண்ணி திகைக்கிறேன்..

மாயவளே என்னை மயக்கி
விளையாடியதுப் போதும்..
இனி என்னை மயக்கி விளையாட
என்னிடம் இல்லையே ஏதும்...
-செந்தமிழ் நாகராஜ்

எழுதியவர் : செந்தமிழ் நாகராஜ் (6-Mar-16, 7:36 pm)
Tanglish : ennavale
பார்வை : 263

மேலே