செந்தமிழ் நாகராஜ் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  செந்தமிழ் நாகராஜ்
இடம்:  வேலூர் மாவட்டம்
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  27-Feb-2016
பார்த்தவர்கள்:  89
புள்ளி:  14

என்னைப் பற்றி...

எனது பாதையை நானே சித்தரித்து
எனது வாழ்வை நானே நகர்த்துபவன் ......
-செந்தமிழ் நாகராஜ்

என் படைப்புகள்
செந்தமிழ் நாகராஜ் செய்திகள்
செந்தமிழ் நாகராஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Mar-2017 6:40 pm

மாமிச வாய்கள்
---------------------------
மாமிச சதைகளை
தின்ன வாய்களுக்கு
கனிகளும் , காய்களும்
ருசி தணிக்கவில்லை...
பற்களின் இடுக்குளில்
சிக்கும் மாமிச சதைக்காக
இளஞ்செடியின் வேர்
பல்குச்சியாக மாற்றப்படுகிறது...
அன்று ஒழுகிய எச்சிலை
ஈடுசெய்ய மாமிச வாய்கள்
இன்று குறுதியை
ஒழுக விடுகிறது...
இதுவரை இருளில்
மறைக்கப்பட்டிருந்த நிழல்
இன்று இரவு வந்ததும்
பல உருவங்களாக
நிழற்படமாகிறது...
செய்தித்தாள்களில்
இருந்த மின்மினிகளைகூட
மாமிச பட்டியலில்
சேர்த்துக்கொண்டு
உருவக்காகிதங்களையும்
மாமிச வாய்கள்
மென்று விழுங்குகிறது...
நவீன உலகத்தில்
மாமிச வாய்களின்
ருசிக்கேற்ப தின்பண்டங்கள்
பார்க்கும் இடமெல்லாம

மேலும்

செந்தமிழ் நாகராஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Sep-2016 7:06 pm

உள்ளத்தில் அன்பிருந்து ஊதியம் இல்லையானால்
காதல் கிடைத்தாலும் கசப்பு..

மேலும்

செந்தமிழ் நாகராஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Sep-2016 6:40 pm

புசிப்பதைக் காதல் புசித்தப்பின் கையசைத்தால்
சாதலே எங்கும் மருந்து..

மேலும்

செந்தமிழ் நாகராஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Sep-2016 6:24 pm

இழுக்க இழுக்க அழுக்கு சேர்ந்தப்பின்
மண்ணிற்குச் சொந்தம் உயிர்..

மேலும்

செந்தமிழ் நாகராஜ் - செந்தமிழ் நாகராஜ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Apr-2016 3:27 am

உடைந்து போனேன்..
நொறுங்கி போனேன்..
கண்கள் கலங்காமல்
ஈரமாவது ஏன் ?...

நெருங்க முயன்றேன்
விலகி சென்றாய்...
விலக முயன்றேன்
என்மனதை காணவில்லை...

குயிலுக்கோ சுதி தெரியாது
எனக்கோ மதி கிடையாது..
வாங்கிய வடுவே ஆறவில்லை
இருப்பினும் மோகம் தீரவில்லை..

உடைந்து போனேன்
என்னுள் பலபிம்பம்...
சேர்க்க முயன்றேன்
அதிலோ உன்பிம்பம்...

தீராதா ?. என் ஆசை தீராதா ?.
காகித கப்பல் கரை ஏறாதா ?.
வீதியில் சந்தித்த நம் மனது
ஒன்றுடன் ஒன்று சேராதா ? ..

உடைந்து போனேன்
நொறுங்கி போனேன்
பெண்ணே உன்னாலே
எல்லாம் உன்னாலே....
-செந்தமிழ் நாகராஜ்

மேலும்

பெண்ணின் வருகையில் தான் ஒருவனின் வாழ்க்கை தங்கி இருக்கிறது 03-Apr-2016 5:51 pm
ஹ்ம்ம்ம்.... தொடருங்கள் !! 03-Apr-2016 8:55 am
செந்தமிழ் நாகராஜ் - மோகன் சிவா அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Apr-2016 12:11 am

ஒரு தகப்பன் தன் மகனுக்கு கொடுக்கும் சிறந்த சொத்து என்ன. ? ஏட்டு கல்வியா.? அனுபவா.? பணமா.? இந்த மூன்றில் ஏதாவது ஒன்று தான் நீங்கள் தங்களது தந்தையின் மூலமாக பெறமுடியும் என்றால் எதை தேர்ந்தெடுப்பீர்கள் ...? காரணம் என்ன. .? ஒரு முக்கியமான குறிப்பு உங்கள் தந்தையிடம் இந்த மூன்றில் ஒன்றை மட்டுமே உங்களால் பெறமுடியும். நீங்கள் வீட்டிற்கு ஒரே பிள்ளையாக இருந்தாலும் சரி. (அவ்வாறு ஒரு சூழல் ஏற்பட்டால் )

மேலும்

அனுபவம் தான் ஏனென்றால் 14-Apr-2016 6:47 am
அனுபவம் என்பது சரியான பதிலாக இருந்தாலும் அதைக் சரியாக கொடுக்கும் பக்குவமும் அனுபவமும் தந்தைக்கு இல்லை என்றால் என்ன செய்வது? இதற்கு சரியான பதிலே நீங்கள் குறிப்பிடாத அன்பும் , பொறுப்பும் மட்டுமே அவர் நமக்கு சேர்த்து வைக்கும் சொத்து என நான் எண்ணுகிறேன் . 06-Apr-2016 6:32 pm
கல்வி நாம் கற்றுக்கொள்ள வேண்டியது. பணம் நாம் சம்பாதிக்க வேண்டியது. அனுபவம் மட்டுமே தந்தையின் மூலம் கிடைக்கும் உண்மையான சொத்து. 05-Apr-2016 12:36 pm
இன்றைய எதார்த்தம் இதுவே...அதை தெளிவாக கூறிவிட்டீர்கள். இங்கே பலர் ஒரு முக மூடியை மூடிக்கொண்டு இக்கருத்தை மறுக்கிறார்கள். இக்கருத்தின் மூலம் அவர்கள் முகத்திரையை விலக்கப்படும்., அவர்கள் மணத்திற்குள்ளே.என நான் நம்புகிறேன். அந்த காரணம் கொண்டு என்னால் இக்கேள்வி எழுப்ப பட்டது. ஆனால் என்னை பொருத்தவரை பணம் சம்பாதித்தல் ஒரு தனி மனிதனின் உள்வழதிறமையை பொருத்து அமைய வேண்டும். அதுவே அவனுக்கு மண நிம்மதியை கொடுக்கும். ஏட்டுச் சுரைக்காய் கரிக்கு உதவாது என்பார்கள். கல்வியானது அனுபவமாக இருத்தல் வேண்டும். ஏடாக இருந்து எந்த வித உபயோகமும் இல்லை. நம் முன்னோர்களின்(ஆதி மனிதன்) அனுபவம் இல்லாவிடில் இன்று இந்த மனித குலமே இருந்திருக்க வாய்ப்பில்லை. எனவே பெற்றோர்களின் அனுபவ அறிவை பிள்ளைகள் பெருவது சாலச்சிறந்தது.அந்த அனுபவம் எத்தகைய சூழலில் பெறபட்டாலும் சரி. பெற்றோர்களின் பணமும் பிள்ளைகளுக்கு தேவை தான். ஆனால் அது எத்தகைய அளவு என்பதே முக்கியம்.அளவு கடந்த செல்வம் பிள்ளைகளுக்கு ஆபத்தை உண்டாக்கும். அவர்களை நன்நெறியில் இருந்து பிறல வைக்கும். சோம்பேரிகளாக மாற்றவும் கூடும். (சில இடங்களில் சில மனிதர்கள் ) எனவே பணத்தை அளவோடு சேர்ந்து வைத்து மீதமிருந்த பணத்தில் சந்தோசமாக காலத்தை கடத்த வேண்டும். மணமிருந்தால் பிறருக்கு தருவது உயர்ந்த மனிதனுக்கு அடையாளம். என்பதே என் கருத்து. 04-Apr-2016 12:34 pm
செந்தமிழ் நாகராஜ் - கீத்ஸ் அளித்த கருத்துக் கணிப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Apr-2016 10:52 am

சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் குறைப்பு பற்றிய உங்கள் கருத்து என்ன?

மேலும்

ஏற்கத்தக்க ஒன்று ....வாங்கிய கடனைவிட அதிகமாக பொதுமக்கள் பணத்தை கட்டும் விதத்தில் வட்டியின் சேமிப்பு கடனை குறைக்கும் காரியம் பொதுமக்களுக்கு பயனுள்ள ஒன்று .... 03-Apr-2016 4:08 am
செந்தமிழ் நாகராஜ் - கீத்ஸ் அளித்த கருத்துக் கணிப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Mar-2016 11:01 am

இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டிற்கு தரும் ஆதரவு மற்ற விளையாட்டுகளுக்கும் உள்ளதா?

மேலும்

நிச்சயம் இல்லை ...பணம் குவிவது கிரிக்கெட் விளையாட்டில் மட்டும் தானே ...பின் எப்படி அவர் மனங்களுக்கு நல்லெண்ணம் வந்துவிடப்போகிறது .....அவ்வாறு வந்துவிட்டாலும் அது சிலரின் கண் திரையை மறைப்பதற்கு தானே தவிர முழுமையான ஆதரவு கிடையாது .... 03-Apr-2016 4:02 am
செந்தமிழ் நாகராஜ் - செந்தமிழ் நாகராஜ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Mar-2016 7:36 pm

ஏழு நிறத்து வானவில்லு
வண்ணம் இழந்து போகுமோ..
காதலெனும் சொல்லுக்குள்ள
எல்லா வண்ணமும் மீளுமோ..

அவள நினைக்கையில
தேன் சொட்டு நாவில் ஊருது..
இடைவிடும் கண் சிமிட்டலாலே
என்கர்வமோ காணாப் போகுது..

தமிழ் பயிலும் காரணத்தால்
காதலிப்பதில் அழகு கூடியதா..
ஒட்டுமொத்த என் உயிர்மெய்யில்
உன் மெய்யும் சேர்ந்ததா...

காதலை சொல்லாமலே
அனுஅணுவாய் ரசிக்கிறேன்..
சொல்ல வரும் நேரம் காதலின்
முடிவை எண்ணி திகைக்கிறேன்..

மாயவளே என்னை மயக்கி
விளையாடியதுப் போதும்..
இனி என்னை மயக்கி விளையாட
என்னிடம் இல்லையே ஏதும்...
-செந்தமிழ் நாகராஜ்

மேலும்

மொழி இன்றி காதலில் வாழ்வது தான் ஆனந்தத்தின் உச்சம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 07-Mar-2016 12:54 am
மேலும்...
கருத்துகள்

இவர் பின்தொடர்பவர்கள் (13)

ப்ரியா

ப்ரியா

கன்னியாக்குமரி மாவட்டம்

இவரை பின்தொடர்பவர்கள் (13)

மேலே