சங்கே முழங்கு

கள்ளாட்சிக் கொண்டு களவாண்டோர் செய்திட்ட
முள்ளாட்சி நீங்க முனைந்தொன்றாய் – வெள்ளாவி
வைத்து வெளுப்பாக்க வேண்டுமென்ற பாட்டினைஇ
சைத்திங்கு சங்கே முழங்கு.

நெல்லாட்சிக் கொண்டு நிமிர்ந்த நிலமெங்கும்
புல்லாட்சிச் செய்யும் புதுக்கோலம் – இல்லாமல்
செய்து எழிலாய் செழித்தோங்கும் நெல்வயல்
வைத்திடச் சங்கே முழங்கு.

சொற்பஞ்ச மென்று சொதப்புதற்கு ஆங்கிலத்தைக்
கற்றே தமிழ்மொழி கொண்டுள்ள – நற்சுவை
கொன்று புதைக்காமல் கூட்டும் புதுச்சொல்லால்
ஒன்றிணைக்க சங்கே முழங்கு.

*மெய்யன நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (16-Mar-16, 1:26 am)
பார்வை : 173

மேலே