மூலை

முகங்கள் பிம்பங்கள் பொய்த்த வேளையில்
சுற்றம் நட்பு கைவிட்ட நாழிகையில்
பிரதி உபகாரத்தின் எதிர்பார்ப்பின்றி
என் புலம்பல்களுக்கு செவி மடுத்து
மௌனத்தை சாட்சியம் வைத்து
எனை தாங்கக் காத்திருக்கிறது
எங்கும் எப்போதும் ஏதோவொரு மூலை

எழுதியவர் : பிரத்யுக்ஷா பிரஜோத் (18-Mar-16, 9:10 am)
Tanglish : muulai
பார்வை : 89

மேலே