மௌனம் ஏன் தொடர்கிறது
ஒய்வு கொண்ட நிலவும்
திரும்பி வந்து புன்னகைக்கிறது
உறங்கிவிட்ட கனவுகளும்
மீண்டும் வந்து திரை விரிக்கிறது
மூடிக் கிடந்த வீணையும்
யாரோ எடுத்து மீட்ட ராகம் பாடுகிறது
நிலவின் கனவின் வீணையின் உவமையே
உன்னிடம் மட்டும் ஏனிந்த மௌனம் தொடர்கிறது ?
----கவின் சாரலன்