காயம்தந்த என் காதல் பயணம்

வின்வெளியில் வீற்றிருக்கும் வெண்ணிலவும்
தன் முகம்காட்ட மறுக்குமடி
பெண்ணே உன் பேரழகில்
நான் ஒரு பாதிதானென்று....!

வண்ணச்சிறகடிக்கும் வண்ணத்துப்பூச்சியினம்
வட்டமிட்டு புலம்புதடி.....
பேரழகி உனக்கு முன்னால்
நாங்கள் பிறந்ததே பெறும் பாவமென்று....!

உன் முத்துப்புன்னகையில்
வெள்ளிக்கொலுசு கூட
வாயடைத்துப் போகுமடி....!!

என் உயிரை எடுத்துக்கொண்டு
வெறும் உடலைமட்டும் விட்டுச்சென்றவளே.........

காதலென்றால் என்னவென்று
உன்னைக் காதலித்த பிறகுதான் தெரிந்துகொண்டேன்.........!

அது இதயமில்லா உடலைக்கூட
இயங்கவைத்துப் பார்க்குமென்று...!

என் ஜன்னலோர பேருந்துப் பயணத்தில்
உன் ஓரப்பார்வையினால்
ஒருகோடி ஆனந்தம் தந்தவளே.......

பாழடைந்த என் வாழ்க்கை பயணத்தில்
வெளிச்சம் தர வருவாயா.....?

விடைதெரியா கேள்வியைக்கேட்டு
என் மனம் விம்மி அழுததடி.....!
உன்னை வீதியிலே தவிக்கவிட்டு
நான் வீடு திரும்பியபோது....!

உன் மடியில் தலைசாய
ஆசைதான் எனக்கும்....

என் தலைவிதி என்னசெய்யுமோ..... ?

தடம்புரள்கிறது என் நெஞ்சம்
ஒரு தாயக்கட்டைபோல......!!

-சதீஷ் ராம்கி.

எழுதியவர் : சதீஷ் ராம்கி (20-Mar-16, 8:27 pm)
சேர்த்தது : சதீஷ் ராம்கி
பார்வை : 309

மேலே