‎மின்னல்‬

‪மின்னல்
வானின் ரங்கோலி
மேகம் அழும்போது படமெடுக்கும்

மின்விளக்கில்லா ஊரினை
வெளிச்சமாக்கும் கடவுள்

கூடவே தன் தோழன் இடியைக் கூட்டிவந்து
குழந்தைகளை மிரளவைக்கும் பூச்சாண்டி

மின்னல் வெண்மையின் இலக்கணம்
இல்லையிதற்கு தலைக்கணம்

ஏழையில் குடிசையில் ஆரம்பித்து
பெரிய கோட்டையில் வந்து முடிக்கும் தனது பாதையை...

நேர்வழி என்றும் பிடிக்காதோ...
பல பின்னல்களைக் கொண்டிருக்கும் இந்த மின்னல்..

மனதிற்குள் சில சமயம் உதிக்கும்
மின்னல் போன்ற எண்ணங்களே
புதுப்புது கண்டுபிடிப்புகளின் காரணகர்த்தாவாகிறது...

மின்னலைப் பிடிக்க முடியாது
ஒரு கூண்டுக்குள் அடைக்க முடியாது

மின்னல் ஆண்டவனின் ப்ளாஸ்

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (27-Mar-16, 1:33 pm)
பார்வை : 1907

மேலே