திசைகள்
ஒவ்வொரு பயணத்தையும்
வழி நடாத்துபவை..
தெளிவாகவும்
தெளிவற்றும்
புலனாகியும்
புலனாகாமலும்
ஒளி மிகுந்தும்
இருள் கவிந்தும்...
பல பாதை வழியே
பயணத்தின் சேரும்
முடிவிடத்துக்கு
அழைத்துச் செல்பவை
சில இடை நடுவில்
விட்டுச் செல்பவை..
அந்தகாரத்தை
மறைக்க வெளிச்ச முலாம்
பூசிய சில திசைகள் காட்டும்
பயணங்கள் இருட் சகதிக்கு
இழுத்துச் செல்வதை
எதையும் அறியாத கண்கள்
உடன் உணர்வதில்லை
கற்கள் முட்கள்
கடந்து கால் வைக்கும்
பயணங்களில் பார்வைகளில்
புலப்படா சொற்களால்
தேன் தடவிய திக்குகளில்
தடம்மாறும் பயணங்கள்
தன் சேருமிடம் அடைவதில்லை..