சில துளிகள்

விண்மீன்கள் துணையோடு
வான் உலா வருகிறான்
நிலாத் தோழன்..

கண் இமைக்காமல்
சுட்டெரிக்கிறான்
ஆதவன்..

உன்னைக் கண்ட நாள்முதலாய்
உலகம் அழகானது
கண்ணாடி கடவுளானது..

சிட்டுக்குருவியின் சத்தம்
சுகமாய்த்தான் ஒலித்தது
சுவர்க் கடிகாரத்தில்...

எழுதியவர் : வே புனிதா வேளாங்கண்ணி (30-Mar-16, 10:52 am)
Tanglish : sila thulikal
பார்வை : 112

மேலே