கலைநயம்

உருமாறும் உணர்விலே
உனையெண்ணி மறதியில்
தவிக்கிறேன் தனிமையில்
துடிக்கிறேன் வெறுமையில்

பனிக்காலம் பொழுதிலே
குளிரோடு மனதினில்
உனதாக்கி கலைநயம்
மயக்கத்தில் களிநடம்

தினந்தோறும் நினைவிலே
கருவோடுக் கருத்துடன்
உளமாகி உயிரெழக்
கனவோடுக் கலைகிறாய்

- செல்வா

பி.கு: புளிமாங்காய் + கருவிளம் வகையில் வஞ்சித்துறை

எழுதியவர் : செல்வா (1-Apr-16, 6:08 pm)
பார்வை : 157

மேலே