தாத்தா காப்பார் கைகளில் அணைத்து

என்னாச்சு?
என்று கோபமாய்
அதட்டிக் கேட்பார்கள் என்
அம்மாவும், அப்பாவும்!

அறையில் கலாட்டா செய்து
சப்தமிட்டபடி நாங்கள் – நானும்
அண்ணனும், தம்பியும்,
தங்கையும்!

கட்டிலில் ஏறிக் குதித்தபடி,
தலையணையைத் தூக்கி எறிந்தபடி,
பஞ்சுத் துகள்கள் காற்றில் பறந்தபடி,
அலைஅலையாய் எங்கள் அறை!

அம்மாவோ அடிக்க வருவார்,
அப்பாவோ என்னாச்சு என அதட்டுவார்,
தாத்தா விரைந்து வந்து எங்களைக்
காப்பார் கைகளில் அணைத்து!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (4-Apr-16, 3:00 pm)
பார்வை : 2688

மேலே