விருட்சம் உனக்கு- நாகூர் லெத்தீப்
ஆற்றில்
அலைகிறது
நீருக்குள் கரைந்த
அழுக்கு - முகமெல்லாம்
வெண்மை.........!!
===//===//===//===//
அரை நிறை
நாற்காலி
கால் இருந்து நொண்டி
ஊனம் யாருக்கு
மனதிலா.......!!
===//===//===//===//
அறைக்குள்
வெளிச்சம்
விருட்சமானது
தெளிவு
கிடைக்க விலகியது
சந்தேகமோ........!!
===//===//===//===//
எங்கே போகிறது
அதிசய குருவி
ஆசையோடு வாழ்ந்திட
வீழ்ந்திட தடை
எதுவும் இல்லாமல் .......!!
===//===//===//===//
ஆனந்த
ராகம்
அடி பட்ட உடன்
எழும் உள்ளார்ந்த வலி
உடன் இருந்த
சொந்தம்.........!!
===//===//===//===//