மீளவுமொரு புயல்

உன் கூந்தல்
கூட்டில் என்
முத்தக்குருவிகளை
மூடிக்கொள்!!
உன் சுவாசச்சூட்டில்
என் உயிரின்
அடிவாரத்தில் ஓர்
ரகளைசெய்!
என் மிருகத்தை
குடைந்து குடைந்து
கொஞ்சும்
குழந்தை செய்!
புயலோடு
போராடுமெனை
உன் பூக்களுக்குள்
புதைத்துக்கொள்!
என் மூளையின்
முக்கால் பாகம்வரை
நீயே நீந்தி
கால்பாகத்தில்
கால்கழுவிசெல்!
உனக்கென
மாத்திரமே
என் உயிர்!
உறுதிகொள் அன்பே...
நேற்றுவரை
கட்டில் கனா
துப்பாக்கி முனையில்
இன்றுமுதல்
கைதியின் கனா!
கேள்வியுற்றேன்
தேர்தல்
வாக்குறுதியில்
மீனவர் கொலைகள்
தீர்வுபெறுமாம்
எந்த பிரிவில்
இந்த கனா???

எழுதியவர் : புலவூரான் ரிஷி (11-Apr-16, 9:15 pm)
பார்வை : 136

மேலே