1 சபி 2 சமு

காற்று
கைபிடித்துசெல்லும்
சருகின்
இறந்தகாலமென்பது

குழந்தையின்
அழுகையை
செரிக்க இயலாது
சமாதன சின்னமாக‌
கொடுக்கப்பட்டிருக்கும்

காதலியின்
உணர்ச்சிகூட்டும்
முயற்சியொன்றில்
பங்கெடுத்திருக்கும்

முத்தங்களை
பிரிந்த வேதனையில்
கிளையிலிருந்து
கிள்ளப்பட்டிருக்கும்

ஓர் தோள்பட்டையில்
பட்சியின் எச்சத்தை
எடுத்தெறிய‌
உதவியிருக்கும்

செழுமையில் மயங்கிய
மிருகத்தின் பற்களால்
சிரச்சேதம்
நிகழ்ந்திருக்கும்

தனிமையில்
காமம் கிளர‌
இரவொன்றில்
இரையாகியிருக்கும்

காற்று
கைப்பிடித்துசெல்லும்
சருகின் இறந்தகாலம்
பசுமையே....

ஒரு பறவையின்
கூட்டில்
பங்கெடுக்கலாம்

அட்டைகளின்
புணர்தலுக்கு
மறைவிடமாகலாம்

பிராணியொன்றின்
மதியபோசனத்தில்
தவிர்க்கபடாதிருக்கலாம்

புயலில்
உருக்குலைந்து
பசளையாகலாம்

அதீதமாய்
பைத்தியக்காரன்
மூளையின் கர்ப்பத்தில்
கவியின் கருவாகலாம்

ஒர் சருகின்
நிகழ்காலமென்பது
தனிமையிலிருக்கும்
யாரோ சிலரின்
பசுமைகளை புரட்டும்
மந்திரக்கோலே

எழுதியவர் : புலவூரான் ரிஷி (16-Apr-16, 10:22 pm)
பார்வை : 63

புதிய படைப்புகள்

மேலே