நூல்+அகம்

நூலகத்தின் மூச்சு
உயிரற்று கிடக்கிறது ...!
மனிதர்களின் மூச்சு காற்று
படாமல் இருப்பதால் ....!

மனிதர்களின் மூச்சு காற்று
கடினமாய் மாறிக்கொண்டிருக்கிறது ...!
அன்றாட அழுத்தங்களின் காரணமாய்
நிம்மதியை தேடி தேடி...!

ஆக்ஸ்சிஜன் கொடுக்க
கார்பன் டை ஆக்ஸ்சைடை எடுக்கும் மரமும்,
தான் எண்ணற்ற பறவைகளுக்கு
நூலற்ற அகமாம்..!

எண்ணற்ற புத்தகங்களை வைத்திருக்கிறது நூலகம்,
மரங்களில் உள்ள இலை, கனி, மலர்களை போல..!
நம் மனதை வளப்படுத்த..!
வாழ்வை நெறி படுத்த..!

சற்று ஒதுக்கிடுவோம் நிமிடங்களை...
புத்தகத்தின் சுவாசத்தோடு..!
உயிர் கொடுத்திடுவோம் நூலகத்திற்கு..!
உயிர் பெற்றிடுவோம்! நம் தேடல்களுக்கு......



- கார்த்திக் ஜெயராம்

எழுதியவர் : கார்த்திக் ஜெயராம் (18-Apr-16, 10:18 pm)
பார்வை : 142

மேலே