நன்னெறிக் கதைகள்
அது ஒரு சிறிய எரிமலை,அந்த எரிமலையின் அருகே ஒரு சிறிய தவலையொன்று தன் குடும்பத்துடன் வசித்து வந்தது ,
சிறிய தவளைக்கு பொழுது போக்கு தினமும் வேடிக்கை பார்ப்பது ,தினமும் மாலை ஒரு எறும்பும் சிறிய தவளையுடன் சேர்ந்து பொழுதைக் கழிக்கும்
இப்படியாக நாட்கள் சென்றது
அதே போல் அன்றும் சிறிய தவளை எரிமலையின் அருகே அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது, எறும்பும் வந்தது,
பிறகு தவளையும் எறும்பும் சேர்ந்து கண்ணாம்பூச்சி விளையாட ஆரம்பித்தது, தவளை கண்ணை கட்டிக் கொண்டது ,
இரண்டும் மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருந்தது
அப்போது விளையாட்டில் தவளை துறத்த எறும்பு ஓட எறும்பை தவளை துரத்த
திடீரென்று எறும்பு எரிமலையினுள் விழுந்து விட்டது , தவளை எவ்வளவோ முயன்றும் எறும்பை காப்பாற்ற முடியவில்லை,எரும்பு இறந்து விட்டது,
தினமும் எறும்பை நினைத்து சிறிய தவளை அழுது கொண்டே இருந்தது ,
இதை பார்த்த அதனது அம்மா தவளை சிறிய தவளையிடம் வந்து
நீ வருத்தப் படாதே ,உன் நண்பன் எறும்பு சாகவில்லை அவன் இப்போது தெய்வமாகி விட்டான் ,அவன் சொர்ங்கத்தில் மிக சந்தோசமாக வாழ்வான் என்று கூறியது
அம்மா தவளை கூறிய ஆறுதலை தப்பாக புரிந்து கொண்ட சிறிய தவளை ,அந்த எரிமலைக்குள் குதித்தாள் நானும் கடவுளாகி விடுவேன் என்னையும் அனைவரும் கடவுளாக வணங்குவர் ,நானும் எறும்பை போலவே சொர்ங்கத்தில் சந்தோசமாக வாழலாம் என தப்பாக புரிந்து கொண்டு
சிறிய தவளை எரிமலையினுள் குதித்து பரிதாபமாக செத்துப் போனது ,,
இதே போன்று தான் நம் முன்னர்கள் கூறிய கருத்தை தப்பாக புரிந்து கொண்டு நாமே நம்மையறியாமல் நாமும் நம்மால் இவ்வுலகையும் அழிவு பாதைக்கு கொண்டு செல்கிறோம்,
நாம் பழம் தரும் மரங்களை நடுவோம் பறவைகளை வாழச் செய்வோம்
இக் கதையிலிருந்து நீங்கள் கற்றுக் கொண்டது என்ன,
இக் கதைக்கு என்ன தலைப்புைபொருத்தமாக இருக்கும்

