வெற்று காகிதம்

ஆறு மாதங்கள் அறைக்குள்ளேயே ஊமையாய் அழுது கொண்டே இருந்தேன் ....!
இரவில் உறங்க மறுத்தது என் இமைகள்..,
இமைகள் மூடினால் அவளின் உருவம் ..,
இமை திறந்தாலோ கண்ணீர்த் துளிகளில் அவளின் நினைவு ......!

மறக்க நினைக்கிறேன் முடியவில்லை..,
மறுபடி மறுபடி அவளின் நினைவு..,
என் வாழ்க்கை இவ்வளவு தானோ ?
என்னைப் படைத்த ஆண்டவன் என் வாழ்க்கை டையிரை வெற்று காகிதமாய் விட்டு விட்டான் போலும்...!
கல் நெஞ்சம் கொண்டவனாய்க் கடவுள்....!

எழுதியவர் : விமல் திரு (4-May-16, 7:04 am)
பார்வை : 438

மேலே