அகம் மகிழ்கிறேன் அன்னையே

அன்பை கொடுத்தவளே - என்னை
ஆளாக்கி வளர்த்தவளே,
இவ்வுலகத்தை காட்டியவளே - என்னை
ஈன்றெடுத்து காத்தவளே,
உதிரம் தந்து உள்ளம் தந்தவளே - என்னை
ஊர்போற்ற வழி செய்தவளே,
என் உயிர் நீதான் என்றவளே - நான் உயர
ஏணிப்படியாய் நின்றவளே,
ஐயம் தெளிய வைத்தவளே - எனக்கு
ஒன்றே குலமென்று கற்று தந்தவளே,
ஓயாமல் நீ உழைத்து எனை வளர்த்தவளே - எனக்கு
ஔடதம் கொடுக்காமல் காத்தவளே,
அஃதெல்லாம் நீ சொல்லிக் கொடுத்தாயே
என் தாயே - உனக்கு
அன்னையர் தின வாழ்த்து சொல்வதில் - என்
அகம் மகிழ்குறது அன்னையே.

எழுதியவர் : கவிபிரவீன்குமார் (8-May-16, 11:14 am)
பார்வை : 238

மேலே