அம்மை அப்பன்

குரோதத்தின் கண் குடிபுகா வண்ணம்

காமத்தின் கண் கட்டுறா வண்ணம்

பாசத்தின் கண் பற்றாகா வண்ணம்

நேசத்தின் கண் நெகிழா வண்ணம்

ஆசையின் கண் அசைவுறா வண்ணம்

இச்சையின் கண் இசைந்திடா வண்ணம்

ஈசனின் கண் மாத்திரம் அடியேன் சிந்தை

ஈடுபட சித்தம் கொள்ள வேண்டுமே
தில்லைஅம்பல நடராஜா

*** கருவுண்டு இசையுண்டு
வசையுண்டு வெகுண்டு
துவண்டு மருண்டு
ஆசை அறுபட்டு
பின் சிவன்வசம் சரன்புகுவதே
மானுட நியதி .

சிற்றம்பலம்

எழுதியவர் : கிருத்திகா (8-May-16, 12:28 pm)
Tanglish : ammai appan
பார்வை : 152

மேலே