வலியை தந்து

வழியில் வந்தவள்
வலியை
மட்டும் தந்து
விலகி
நிற்கிறாள்.....!

தினமும்
உன்னினைவில்
கனவில்
மிதந்திட
ஆசைதான்....தூக்கமில்லாத
போது.....
அதுவும்
தோல்விதான்.....!!

நேசம்
கொண்டு
நெருக்கம்
கண்டு.....வாழ்ந்த
காலம்
வசந்தகால
நினைவுகள்
தான்.....மறுத்தாலும்
வெறுத்தாலும்
மனதோடு
நம் நினைவுகள்
கொள்ளை அழகு.....!!

இறுக்கி
அணைத்திட
அளவில்லாத
அன்பு.....ஆனாலும்
விலகி
நின்று..... இந்தக்
காதல்
வித்தை
காட்டுதடி......!!

உன்னை
நினைச்சேன்
என்னைத்
தொலைச்சேன்....
காலம்
செய்த கோலமென்று
கோபம்
கொண்டு....சாபமிட்டுக்
கொண்டேன்....தெரிந்தோ
தெரியாமலோ
தெய்வத்தை.....!!

கண்ணே
கண்மணியே......
என்
கண்ணுக்குள்
அம்மணியே.....என்று
தான்.....இவன்
மணித்துளிகளும்
மரணித்தன.....இன்று
அதே
வழியில் கண்ணீர்த்
துளிகளும்
சாவைத்தேடி.....!!

ஓடிடும்
காலங்கள்
கோடிட்டுப்
போனது.....எல்லை
இதுவரை
என்று.....ஆனாலும்
காத்திருப்பேன்
என்
ஆயுள் அழியும்
வரைக்கும்......!!

எழுதியவர் : thampu (8-May-16, 2:08 pm)
பார்வை : 138

மேலே